Sunday 1 July 2018

தஞ்சாவூரில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு

தஞ்சாவூர்: இந்திய விமானப்படைக்கு தகுதியான ஆட்கள் தேர்வு செய்திட, தேர்வு முகாம் ஜூலை 21 முதல் ஜூலை 29 ஆம் தேதி வரை தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. தகுதியுள்ள திருமணமாகாத இளைஞர்கள் தேர்வு முகாமில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார். விமானப்படை ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் 3.1.1998 க்கும் 2.1.2002 க்கும் இடைப்பட்ட காலத்தில் (இரு நாட்கள் உட்பட) பிறந்திருக்க வேண்டும். எந்த வகையிலும் வயது தளர்வு கிடையாது. திருமணமாகாதவராக இருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 சதவீத மொத்த மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பில் உயிரியல் பாடப் பிரிவு கட்டாயம் இடம் பெற்று தேர்வாகியிருக்க வேண்டும். நல்ல உடற்தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்,  மேலும் விபரங்களுக்கு www.airmenselection.gov.in, www.airmenselection.cdac.in ஆகிய இணையதள முகவரிகளில் பார்வையிட்டு அறிந்து கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment