பேராவூரணி: பேராவூரணி ஒன்றியம் ஊராட்சி ஒன்றியம் பெரியதெற்குக்காடு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் பெற்றோருக்கு ரூ 1000 அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக கிராமத்தினர், ஆசிரியர்கள் பங்களிப்போடு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சேரும் மாணவர்களின் பெற்றோருக்கு தலா ரூ 1000 வழங்கலாம் என பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து திங்கள்கிழமை அன்று பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த 2 பேர், 6 ஆம் வகுப்பில் சேர்ந்த 3 பேர் ஆக 5 பேரின் பெற்றோருக்கு தலா ரூ 1000 வீதம் ஊக்கப்பரிசாக ரூ 5 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வேலம்மாள், பெற்றோர் ஆசிரியர் தலைவர் முருகேசன், அன்னையர் குழு உறுப்பினர் ஜெயா, பள்ளி ஆசிரியர்கள் ஜெயந்தி,ரஞ்சிதா, குளோரி மற்றும் சிவலிங்கம், அம்பிகாபதி, முத்துவேல், மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment