Sunday, 6 May 2018

பேராவூரணி ஒன்றியத்தில் 84 லட்சம் நிதி இழப்பு: ஊராட்சி செயலர் உள்பட 2 பேர் கைது

பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட  16 ஊராட்சிகளில் ரூ. 84  லட்சம் நிதி இழப்பு ஏற்பட்டது தொடர்பாக  ஊராட்சி செயலர் உள்பட இருவர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள 16 ஊராட்சிகளில் 84 லட்சம் ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில்,  மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். நிதியிழப்பு தொடர்பாக நடைபெற்று வந்த விசாரணை மற்றும் தணிக்கை அடிப்படையில் பேராவூரணி ஒன்றிய முன்னாள் கிராம ஊராட்சி ஆணையர் அரசுமணி மற்றும் வலப்பிரமன்காடு,  பழைய நகரம் ஊராட்சியில் பணிபுரிந்த ஊராட்சி செயலாளர் வைரவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தஞ்சை மாவட்ட குற்றவியல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் உள்ள 15 ஊராட்சி செயலாளர்கள்  மீது தொடர் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment