பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 16 ஊராட்சிகளில் ரூ. 84 லட்சம் நிதி இழப்பு ஏற்பட்டது தொடர்பாக ஊராட்சி செயலர் உள்பட இருவர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள 16 ஊராட்சிகளில் 84 லட்சம் ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். நிதியிழப்பு தொடர்பாக நடைபெற்று வந்த விசாரணை மற்றும் தணிக்கை அடிப்படையில் பேராவூரணி ஒன்றிய முன்னாள் கிராம ஊராட்சி ஆணையர் அரசுமணி மற்றும் வலப்பிரமன்காடு, பழைய நகரம் ஊராட்சியில் பணிபுரிந்த ஊராட்சி செயலாளர் வைரவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தஞ்சை மாவட்ட குற்றவியல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் உள்ள 15 ஊராட்சி செயலாளர்கள் மீது தொடர் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Sunday, 6 May 2018
பேராவூரணி ஒன்றியத்தில் 84 லட்சம் நிதி இழப்பு: ஊராட்சி செயலர் உள்பட 2 பேர் கைது
Recommended Articles
- thanjavur
தஞ்சாவூரில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வுJul 01, 2018
தஞ்சாவூர்: இந்திய விமானப்படைக்கு தகுதியான ஆட்கள் தேர்வு செய்திட, தேர்வு முகாம் ஜூலை 21 முதல் ஜூலை 29 ஆம் தேதி வரை தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அர...
- announcement
வணிக நிறுவனங்கள் பண்டிகை கால பரிசு குலுக்கல் திட்டங்களை நடத்த தடைJul 01, 2018
தஞ்சாவூர்:- தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் தங்களுடைய வணிகத்தை பெருக்கி கொள்ளும் நோக்கத்தோடு ஆடி மாத சிறப்பு குலுக்கல்...
- pvi
தஞ்சாவூரில் சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.Jun 30, 2018
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் சாலை பாதுகாப்பு மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆ...
- college
தஞ்சை மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஆட்சியர் உத்தரவுJun 30, 2018
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களில் கேலி செய்வதை (ராகிங்)தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக கல்லூரி முதல்வர்களுடன் கலந் தாய்வுக் கூட்டம் ...
Labels:
crime,
govt,
pvi,
tnj collector
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment