Sunday, 6 May 2018

எழுத்தாளர் கே.முத்தையா நூற்றாண்டு நினைவுச் சுடர் பயணம்



தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தைத் தொடங்கியவரும் எழுத்தாளருமான தோழர் கே.முத்தையா நூற்றாண்டு நினைவுச் சுடர் பயணம் பேராவூரணி, பொன்காடு, தோழர் முத்தையா அவர்களது இல்லத்தில் இருந்து தொடங்கியது. தோழர் ஆர்.சி.பழனிவேல் தலைமையில் தோழர் முத்தையா அவர்களது மாப்பிள்ளை தோழர் இரவீந்திரன் நினைவுச் சுடர் ஏற்றிட கிளைச் செயலாளர் தோழர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் பெற்றுக் கொண்டார். பேராவூரணியில் இருந்து நூற்றாண்டு தொடக்கவிழா மாநாடு நடைபெறும் பட்டுக்கோட்டைக்கு சுடரை தோழர் கார்த்திகேயன் ஏந்திச் சென்றார். நிகழ்வில்  மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், தமுஎகச மாநில துணைச் செயலாளர் களப்பிரன், மாவட்ட துணைத் தலைவர் ஜீவபாரதி, கிளைத் தலைவர் சு.சமந்தா, பொருளாளர் தா.கலைச்செல்வன்,  ஆர்.எஸ்.வேலுச்சாமி,  தமபுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு.நீலகண்டன், முனைவர் ச.கணேசகுமார்,  இரா.மதியழகன், கு.சரவணன், வே.ரெங்கசாமி, நீலமேகம் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். சுடர் பயணத்தின் போது பயணக் குழுவினர் பேராவூரணி பெரியார் சிலை அருகில் சுடர் பயண விளக்கம் அளித்தனர்.

No comments:

Post a Comment