Sunday, 6 May 2018

பேராவூரணியில் காவிரி பாதுகாப்பு இயக்க தெருமுனைக் கூட்டம்

பேராவூரணி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய பாஜக அரசை வலியுறுத்தி காவிரி பாதுகாப்பு இயக்க பேராவூரணி தொகுதி சார்பில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் வியாழன் இரவு அண்ணா சிலை அருகே திறந்த வேனில் வைகோ பேசினார். திமுக மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன், மதிமுக துணை பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், சிபிஐ நிர்வாகிகள் திருஞானம், பாலசுந்தரம், திமுக நிர்வாகிகள் என்.அசோக்குமார், க.அன்பழகன், என்.செல்வராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மைதீன், திமுக நகரச் செயலாளர் தனம் கோ.நீலகண்டன், தலைமைக் கழக பேச்சாளர் அப்துல்மஜீது, காங்கிரஸ் சேக் இப்ராகிம், நடராஜன், சமூக ஆர்வலர் என்.வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment