Saturday, 16 June 2018

வலப்பிரமன்காட்டில் வருவாய்த் துறை சிறப்பு திட்ட முகாம்

வலப்பிரமன்காடு: பேராவூரணி அருகே வலப்பிரமன்காடு ஊராட்சியில் வெள்ளியன்று வருவாய்த்துறை சிறப்பு திட்ட முகாம் வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலர் வில்சன், தலைமை நில அளவையர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன், கிராம நிர்வாக அலுவலர் செல்வம், முன்னாள் ஊராட்சி தலைவர் வி.எஸ்.இளங்கோ மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 26 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment