தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை வட்டாரங்களில் வருகின்ற 12.05.2018 அன்று பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெறவுள்ளது. அனைத்து பள்ளி உரிமையாளர்களும் உரிய ஆவணங்களுடன் வாகனங்களை கொண்டு வந்து ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுக்கும் பொருட்டு விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் வட்ட அளவில் குழுக்களை அமைத்து மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி சாலைபாதுகாப்பு குறித்து அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் மாநில போக்குவரத்து அதிகாரி, போக்குவரத்து ஆணையர் அவர்களது அறிவுரையின்படி பள்ளி செல்லும் மாணவ மாணவியாரின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைபடுத்திடவும், ஓட்டுநர்களுக்கு சாலைபாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை மேம்படுத்திடவும் அனைத்து பள்ளி வாகனங்களையும் ஓரே டேத்தில் ஒரே நாளில் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அதன்படி 12-05-2018 அன்று காலை 08.00 மணிக்கு தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளி வாகனங்களையும் தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்திலும், பட்டுக்கோட்டை பகுதி அலுவலக எல்லைக்கு உட்பட்ட பள்ளி வாகனங்களை அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, கைகாட்டி, பட்டுக்கோட்டை பள்ளி மைதானத்திலும் பதிவுச் சான்று, காப்புச் சான்று, அனுமதிச் சீட்டு, ஓட்டுநர் உரிமம்இ நடத்துனர் உரிமம் மற்றும் பள்ளி சிறப்பு விதிகள் 727/ 2012ன் படி குழுக்களால் நிர்ணயம் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் நடைச்சீட்டு ஆகிய அனைத்து ஆவணங்களுடன் வாகனங்களை கொண்டு வந்து ஆய்வுக்கு உட்படுத்துமாறு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி உரிமையாளர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இந்த ஆய்வுக்கு உட்படாத பள்ளி வாகனங்களின் அனுமதி சீட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்கள்.
Friday, 4 May 2018
தஞ்சை, பட்டுக்கோட்டை வட்டாரங்களில் மே 12 ந் தேதி பள்ளி வாகனங்கள் ஆய்வு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment