Sunday, 13 May 2018

பேராவூரணியில் அம்மா திட்ட முகாம்

பேராவூரணி: சேதுபாவாசத்திரம் ஒன்றியத்துக்குள்பட்ட மரக்காவலசை கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு திட்ட முகாமிற்கு வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் வில்சன், மண்டல துணை வட்டாட்சியர் செல்வகுமார், தலைமை நில அளவையர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுளாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குடும்ப அட்டை, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், முதியோர், விதவை உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்த பரிந்துரைக்கப்பட்டன.

No comments:

Post a Comment