Thursday, 10 May 2018

தஞ்சை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக புகார் தெரிவிக்க தொலைப்பேசி எண்கள் அறிவிப்பு!


தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை தொடர்பாக புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் பகுதிகளில் தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக மாவட்ட அளவில் 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணுடன் மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் சிறப்புக் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இதில், புகார்களைப் பெறுவதற்குத் தனி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குடிநீர் பிரச்னைகள் தொடர்பான கோரிக்கையை 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.
இதேபோல, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறப்புக் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
தஞ்சாவூர் 04362 236451, திருவையாறு 04362 260522, பூதலூர் 04362 288451, ஒரத்தநாடு 04372 233232, திருவோணம் 04372 241451, கும்பகோணம் 0435 2410424, திருவிடைமருதூர் 0435 2460174, திருப்பனந்தாள் 0435 2456424, பாபநாசம் 04374 222451, அம்மாபேட்டை 04374 232844, பட்டுகோட்டை 04373 252863, மதுக்கூர் 04373 260220, பேராவூரணி 04373 272437, சேதுபாவாசத்திரம் 04373-232438

No comments:

Post a Comment