சேதுபாவாசத்திரம், தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, ராவுத்தன்வயல், செந்தலைவயல், அண்ணாநகர்புதுத்தெரு, மந்திரிப்பட்டினம், செம்பியன்மாதேவிப்பட்டினம், கணேசபுரம் உள்பட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் பாய்மர படகு, பைபர்கிளாஸ் படகு, கட்டுமரங்கள் 4,000 நாட்டுப்படகுகளும், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய பகுதிகளில் 301 விசைப்படகுகளும் உள்ளன. விசைப்படகு மீனவர்கள் திங்கள், புதன், சனிக்கிழமைகளிலும், மற்ற தினங்களில் நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். ஆனால் தற்போது வங்ககடலில் உருவாகியுள்ள சூறாவளி காற்று காரணமாக தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்தது. இதனால் கடந்த புதன் கிழமை முதல் மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி டோக்கன் வழங்கவில்லை. இதனால் வழக்கம்போல் கடலுக்கு செல்ல வேண்டிய தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்படாததால் கடந்த புதன் கிழமை முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த 5 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் 10 ஆயிரம் பேர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலையிழந்து தவித்தனர். இந்தநிலையில் இயல்புநிலை திரும்பியதால் விசைப்படகு மீனவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து 5 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
Wednesday, 27 June 2018
தஞ்சை மாவட்டத்தில் 5 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment