பேராவூரணி அருகே விவசாயியை அடித்துக் கொன்றதாக தந்தை, மகனை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த செல்லப்பிள்ளையார் கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமையன் (66). இவருக்கு மனைவி, குழந்தைகள் இல்லை. தனியாக வசித்து வந்தார். பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் இவரது அக்கா மகன் ராமச்சந்திரன் (50). இவர், ராமையன் வீட்டை தனது பெயருக்கு எழுதிக் கேட்டு தகராறு செய்து வந்தாராம்.இந்நிலையில் சம்பவத்தன்று மாலை மோட்டார் சைக்கிளில் சென்ற ராமச்சந்திரன், ராமையன் வீட்டு குடிநீர் பானையை மோதி உடைத்தாராம். இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ராமையன் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தடுக்கச் சென்ற தங்கராஜ் என்பவரை ராமச்சந்திரன் மகன் பாலச்சந்திரன் (30) தாக்கியதில் பலத்த காயமுற்று, பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து ராமச்சந்திரன், பாலச்சந்திரனை கைது செய்தனர்.
Monday, 30 April 2018
பேராவூரணி அருகே விவசாயி கொலை: தந்தை, மகன் கைது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment