Tuesday 8 May 2018

பேராவூரணி அருகே மளிகை கடையில் தீ விபத்து




பேராவூரணி: பேராவூரணி அடுத்த குருவிக் கரம்பை பகுதியைச் சேர்ந்த பழனிவேலு மகன் முத்துவேல்(51). இவர், மடத்துவாசல் பகுதியில் மளிகைக் கடை,ஸ்டூடியோ நடத்தி வந்தார். இந்நிலையில் ஞாயிறு அன்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். இதில் நள்ளிரவு கடையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த பேராவூரணி தீயணைப்பு நிலைய வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். எனினும் கடை முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. கடையின் சேத மதிப்பு ரூ.5 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர். இதுகுறித்துவட்டாட்சியர் எல்.பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் ஜோதி,கிராம நிர்வாக அலுவலர் கணே.மாரிமுத்து, காவல்துறைஉதவி ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

No comments:

Post a Comment