Saturday, 9 June 2018

காலகத்தில் தமிழக அரசின் சிறப்பு சிறப்பு திட்ட முகாம்

பேராவூரணி.:  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம்காலகம் ஊராட்சியில் நடைபெற்ற தமிழக அரசின் சிறப்பு திட்ட முகாமில் 36 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.முகாமிற்கு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு தலைமை வகித்தார். முகாமில் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, முதியோர், விதவைத் தொகை உள்ளிட்ட 36 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.வட்டாட்சியர் எல்.பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலர் வில்சன், மண்டல துணைவட்டாட்சியர் செல்வகுமார், தலைமை நிலஅளவையர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் தர்ஷனா, கிராம நிர்வாக அலுவலர் ஆர்.ரத்தினவேல் மற்றும் வருவாய்துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து செருவாவிடுதி நடமாடும்மருத்துவக்குழு டாக்டர்கள் தீபா, கீர்த்திகாதலைமையில் இலவச பொதுமருத்துவ முகாம் நடைபெற்றது. கண் மருத்துவ நுட்பநர் திரவியம் கண் நோயாளிகளை பரிசோதனை செய்தார். 7 பேருக்கு கண்புரை நோய் இருப்பது கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். முகாமில் சுகாதார செவிலியர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment