Friday, 22 June 2018

தஞ்சையில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு கூட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணி திறனாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:“பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள், தூய்மை இந்தியா திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வரி மற்றும் வரியற்ற இனங்கள் வசூல் பணிகள் திறம்பட மேற்கொள்ளப்பட வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் சாலை பணிகள் அமைத்திடவும் பேரூராட்சிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான மழை நீர், வடிகால், வாய்க்கால்கள் சுத்தம் செய்திடவும் அறிவுறுத்தப்பட்டது.பேரூராட்சி பகுதிகளில் முழுவதும் சுகாதாரப் பணிகள்முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும். மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்து குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீர் விநியோகிக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ள வேண்டும்” என்றார். இக்கூட்டத்தில் பேரூராட்சிசெயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment